தொகுதி பிரச்சனை குறித்து எம்.எல்.ஏக்களுக்கு பறந்த உத்தரவு!! ஸ்டாலின் அட்ராசிட்டி!!

 
ஸ்டாலின்


ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களது தொகுதியில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் 10 முக்கிய கோரிக்கைகள் குறித்த விவரத்தை உடனடியாக அனுப்ப வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும்  முக்கிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார. அதில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின சட்டப்பேரவையில் தி.மு.க. அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவுபெற்றதை முன்னிட்டு ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்’ விரிவாக்கம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்றும் தனது அறிவிப்பில் தெரிவித்திருந்தார்.

ஸ்டாலின்

இதைத்தொடர்ந்து ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்கள் தொகுதியில் நீண்ட நாட்களாக தீர்க்கப்படாமல் உள்ள 10 முக்கிய கோரிக்கைகைளை அடையாளம் காண வேண்டும். அதனை முன்னிலைப்படுத்தி  வருகிற 15 நாட்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டரின் பரிந்துரையின்படி பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்’’ என்று கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்டாலின்

ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தங்களது தொகுதியின் மேம்பாட்டுக்காகவும், மக்கள் பணியையும் முன்னிலைப்படுத்தி செயல்பட வேண்டும். இதை நன்கு உணர்ந்து செயல்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் உள்ளது என்று கூறியுள்ளார். அதிலும் குறிப்பாக, சில தேவைகள் மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தும் நடைமுறையில் உள்ள திட்டங்களின் மூலம் அவற்றைச் செயல்படுத்திட முடியாமல் போயிருக்கலாம். அவற்றை துரிதமாக செயல்படுத்தி முடித்திட ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் செயலாற்ற வேண்டும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web