அடி தூள்! புதிய தலைமை செயலகத்திற்கு அம்பேத்கர் பெயர்!!

 
தலைமை செயலகம்

தெலங்கானா மாநிலத்தில் புதிய தலைமை செயலகத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்கு அம்பேத்கரின் பெயர் வைக்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்துள்ளார்.இது குறித்து தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலக கட்டிடத்திற்கு அம்பேத்கரின் பெயரை வைப்பது தெலங்கானா வைக்கப்படுகிறது. இது நம் மாநில மக்களுக்குப் பெருமை. அனைத்து துறைகளிலும் சமத்துவம் வேண்டும் என்ற அம்பேத்கரின் கொள்கையுடன் தெலங்கானா அரசு செயல்பட்டு வருகிறது என்பதை இது காட்டுகிறது.

chandra

தனி தெலங்கானா என்ற கோட்பாடு அம்பேத்கர் தொலைநோக்குப் பார்வையுடன் அரசியலமைப்பில், புதிய மாநிலங்கள் அமைப்பது தொடர்பான 3வது பிரிவை வைத்தது தான் காரணம். இதன் காரணமாக அம்பேத்கர் வகுத்த கொள்கைகளையே தெலங்கானா அரசு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. இதன் மூலம் புதிய தலைமைச்செயலகத்திற்கு அம்பேத்கரின் பெயரை நாம் சூட்டுவதன் மூலம் தெலங்கானா மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

new secretariat

இதற்கிடையில் கடந்த 13ம் தேதி தெலங்கானா சட்டப்பேரவையில், டெல்லியில் புதிதாக கட்டப்படும் நாடாளுமன்ற கட்டடத்திற்கு, அம்பேத்கரின் பெயரை வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானத்தை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.இதைத்தொடர்ந்து புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகள் விரைவில் நடத்தி முடிக்கப்பட்டு அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட உள்ளது. இதற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web