உறைய வைக்கும் வீடியோ!! 8 அடி நீள பாம்பிடம் இருந்து மகனை மீட்ட துணிச்சல் தாய்!!

 
பாம்பு

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பது பழமொழி. ஆனால் தாய்ப்பாசம் அதைவிடப் பெரியது. பாம்பை நேரில் பார்த்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் உறைந்து விடுவர். தொலைக்காட்சிகளில் கேமராக்கள் வழியாக மிக அருகில் பார்க்கும்  போது பாம்பை பற்றி பலரும் பலவிதமாக சிலாகிப்போம். நேரில் கண்டுவிட்டால் ஐயோ!! சாமி என்னை ஆள விடுங்க என தெறித்து ஓடுவோம்.



வீட்டு வாசலில் எதிர்பாராத விதமாக சுமார் 8 அடி நீள விஷ பாம்பு  ஊர்ந்து செல்வது அறியாமல் குழந்தை ஒன்று செல்ல அப்போது அந்த பாம்பு கடுங்கோபத்துடன் குழந்தையை தீண்ட வருகிறது.  மின்னல் வேகத்தில் குழந்தையின் தாயார் அந்த பாம்பிடம் இருந்து காப்பாற்றுகிறார்.


இந்த காட்சிகள் எதிர் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த  சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இவை  தற்போது சமூகவலைதளத்தில்  வைரலாகி வருகின்றன. இதற்கு நெட்டிசன்கள் பலரும் குழந்தையின் தாய்க்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் பதிவிட்டு வருகின்றனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web