குலாம் நபி ஆசாத் திடீர் விலகல்!! கலக்கத்தில் காங்கிரஸ்!! குமுறும் தொண்டர்கள்!!

 
குலாம் நபி ஆசாத்


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்து வந்த குலாம்நபி ஆசாத் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சி பெரும் சரிவை நோக்கி சென்று கொண்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள்  கருத்து தெரிவித்துள்ளனர்.

குலாம்நபி ஆசாத்
காங்கிரஸ் தலைமை  மீது அதிருப்தியில் இருந்து 23 தலைவர்களின் குலாம்நபி ஆசாத் முக்கியமான ஒருவர். இவரது அதிருப்தியை வெளிப்படையாக பல முறை அவர் தலைமைக்கு அறிவித்து அரசியல் களத்தில் சூறாவளியை ஏற்படுத்தினார்.

இதற்கிடையில் கடந்த 16ம் தேதி காஷ்மீர் காங்கிரஸ் தலைவராக குலாம்நபி ஆசாத் நியமிக்கப்பட்ட சிறது நேரத்திலேயே தனது பதவியை ராஜினாமா செய்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். மேலும் பிரசாரக் குழு தலைவர் பதவியையும்  குலாம்நபி ஆசாத் ராஜினாமா செய்தார். 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக மட்டுமல்லாமல், காஷ்மீரின் முன்னாள் முதல்வர், அகில இந்திய அரசியல் விவகாரக்குழு உறுப்பினர், முன்னாள் அமைச்சர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் குலாம்நபி ஆசாத். இந்நிலையில் தொடர் அதிருப்தி காரணமாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அரசியல் களத்தில் சூறாவளியை எழுப்பியுள்ளது.

சோனியா

ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை சந்தித்து வரும் காங்கிரஸ் கட்சி தற்போது மேலும் பெரிய அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும், அதில் இருந்து மீள வேண்டும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web