தங்கம் விலை மீண்டும் சரிவு! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

 
தங்கம்

கடந்த சில நாட்களாகவே ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. புரட்டாசி மாதத்தில் திருமணங்கள் அதிகளவில் நடைப்பெறாது என்பதால், தங்கம் வாங்குவது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து என ஒரு சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து ரூ.37,608-க்கு விற்பனையாகிறது.

தங்கத்தை தங்கமாகவே வாங்கும் போக்கு இந்தியாவில் வேகமாக மாறி வருகிறது. தங்கம் வாங்குவதில் இந்தியர்களுக்கு இருந்த பழைய ஆர்வம் மீண்டும் துளிர் விடுவது கடினம் என்று உலக தங்க கவுன்சிலின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது. தங்கத்திற்கு பல முனைகளில் இருந்து அடிமேல் அடி விழுந்து கொண்டிருக்கிறது. 

தங்கத்தின் நுகர்வை குறைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, வயிறு எரியும் அளவுக்கு தங்கத்தின் மீது வரி மேல் வரி விதித்து வருகிறது. இப்படி செய்வதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைத்துக் கொள்ள முடியும் என்று அரசு கருதுகிறது. பணமதிப்பிழப்பு போன்ற அரசின் நடவடிக்கையால் தங்கத்திற்கான தேவை அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது.

தங்கம்
சென்னையில் கடந்த 2 நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்றும் அதிரடியாக குறைந்தது  விற்பனையாகிறது. இதனால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 25 ரூபாய் குறைந்து, ரூ.4,701-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 192 ரூபாய் குறைந்து, ரூ.37,608-க்கு விற்பனையாகிறது. 

தங்கம் நகைக்கடை
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,870-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 19 ரூபாய் குறைந்து, ரூ.3,851-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 600 ரூபாய் குறைந்து, ரூ.61,800-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.51.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web