தங்கம் விலை மீண்டும் உயர்வு! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்!
பாதுகாப்பான முதலீடாக கருத்தப்படும் தங்கம் பணவீக்க தாக்கத்தால் அதிகளவில் வட்டியைப் பெற போவதில்லை. இதனால், சில முதலீட்டார்கள் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்கி வருகிறார்கள். சில முதலீட்டார்கள் பாதுகாப்பான முதலீடாக உள்ள தங்கம் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் நிலவி வருகிறது.
சென்னையில் வாரத்தின் முதல் நாளான நேற்று உயர்ந்து விற்பனையான தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்து விற்பனையாகிறது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அதன்படி சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112-க்கு உயர்ந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 14 ரூபாய் உயர்ந்து, ரூ.4,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 112 ரூபாய் உயர்ந்து, ரூ.38,000-க்கு விற்பனையாகிறது.
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,879-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 12 ரூபாய் உயர்ந்து, ரூ.3,891-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 500 ரூபாய் உயர்ந்து, ரூ.59,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.59.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!