தங்கம் விலை மீண்டும் உயர்வு! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 
Gold Bangles in vertical

தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. திருமண மூகூர்த்த நாட்கள், ஆடி மாதத்திற்கு பின் வரிசையாக வரும் நிலையில், தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச தங்கத்தின் விலைகள், செலாவணி மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள், உள்ளூர் வரிவிதிப்புகள் போன்றவற்றின் அடிப்படையிலேயே இந்தியாவில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால், தங்கம் விலை உயர சர்வதேச விலைகள் தான் முக்கியக் காரணம். சர்வதேச அளவில் தங்கத்தின் விலை உயரும் போது, இந்தியாவில் தங்கத்தின் விலையில் மாற்றம் காணப்படும்.

பணவீக்கம் அதிகமாகும் போது தங்கத்தின் விலை குறையும். பணவீக்கம் அதிகரிக்கும் போது வட்டி விகிதங்கள் உயரும் என்பது பொதுவாக பொருளாதார நடைமுறையாகும். உலக அளவில் தங்கத்திற்கு தேவை அதிகரித்து வருவதால், அதையொட்டி உள்நாட்டு தங்கத்தின் விலையும் சீராக மாற்றம் காணும். எனவே தங்கத்தை வாங்குவதற்கு முன் எப்போதும் விலையை சரிபார்த்துக் கொள்ளவும்.

தங்கம்

வாரத்தின் முதல் நாளான நேற்று தங்கத்தின் விலை உயர்ந்து விற்பனையான நிலையில், நேற்று தங்கம் விலை குறைந்து விற்பனையான நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264-க்கு குறைந்து விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் உயர்ந்து, ரூ.4,890-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து, ரூ.39,120-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்

அதே போல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.4,002-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து, ரூ.4,006-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, ரூ.64,000-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web