உயரத் தொடங்கிய தங்கம்!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!

 
தங்கம்

அமெரிக்கா மற்றும் இந்தியாவில் நிலவி வரும் பணவீக்கம் சர்வதே பொருளாதாரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இவை தவிர, சர்வதேச சந்தையில் கச்ச எண்ணெய் விலை உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்த்த செய்துள்ளது. பங்குகள் தொடர் சரிவையும், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

தங்கம்

பாதுகாப்பான முதலீடாக கருத்தப்படும் தங்கம் பணவீக்க தாக்கத்தால் அதிகளவில் வட்டியைப் பெற போவதில்லை. இதனால், சில முதலீட்டார்கள் குறைந்த விலையில் கிடைக்கும் பங்குகளை வாங்கி வருகிறார்கள். சில முதலீட்டார்கள் பாதுகாப்பான முதலீடாக உள்ள தங்கம் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலையில் ஏற்றம் இறக்கம் நிலவி வருகிறது.சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று உயர்ந்து விற்பனையாகிறது. இதனால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120-க்கு குறைந்து விற்பனை ஆன நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 5 ரூபாய் உயர்ந்து, ரூ.4,805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து, ரூ.38,440-க்கு விற்பனையாகிறது. 

தங்கம்
அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.3,932-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 4 ரூபாய் உயர்ந்து, ரூ.3,936-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்று காலை நிலவரப்படி வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.60,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.60.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web