அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து!! 40 பேர் படுகாயம்!!

 
விபத்து

சென்னையிலிருந்து மேல்மருவத்தூர், வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு செல்லும் அரசுப் பேருந்து ஒன்று நேற்று காலை மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை வந்தவாசியை சேர்ந்த டிரைவர் அண்ணாமலை ஓட்டி வந்தார். அதேபோல், வேலூரிலிருந்து வந்தவாசி வழியாக மேல்மருவத்தூர் செல்லும் அரசு பேருந்து வந்தவாசியை கடந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஏம்பலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டினார். 

விபத்து

மேல்மருவத்தூர் சாலையில் கீழ்க்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே வந்தபோது இந்த பேருந்தும் வேலூரிலிருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் 2 பேருந்துகளின் முன்பக்கமும் சேதம் அடைந்தன. 

இந்த விபத்தில் 2 பேருந்தின் ஓட்டுநர்களான அண்ணாமலை, ராஜேந்திரன் மற்றும் பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 40 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழ்க்கொடுங்காலூர் போலீசார் மற்றும் வந்தவாசி தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ்சுகள் மற்றும் அந்த வழியாக வந்த தனியார் வாகனங்களில் ஏற்றி வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

ஆம்புலன்ஸ்

படுகாயமடைந்த 10 பேர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து கீழ்க்கொடுங்காலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web