நாய் குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஓட்டுனர் பலி!! பணிக்கு சென்ற போது பரிதாபம்!!

 
நாய்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுபா நகரில் வசித்து வருபவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் சீனிவாசன் (46). இவர் அரசு போக்குவரத்து கழக கோவில்பட்டி பணிமனையில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து வேலைக்காக இருசக்கர வாகனத்தில் பணிமனைக்கு புறப்பட்டு சென்றார். 

விபத்து

அப்போது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே ஓடியுள்ளது. நாய் மீது மோதாமல் இருக்க முயற்சித்தபோது, நிலை தடுமாறிய சீனிவாசன் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ரத்தவெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீஸ்

இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த சீனிவாசனுக்கு சுகுணா என்ற மனைவியும், நித்தியா (13), ஹேமா (10) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web