அடடே சூப்பர்...காசிக்கு சுற்றுலா அழைத்து செல்லும் அரசு..!

 
காசி

தமிழகத்தில் மூத்த குடிமக்கள், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ஆன்மிகப் பயணமாக அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு 200 பயனாளிகளை ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

 காசி

ஆன்மிகப் பயணம் செல்ல விரும்புவோர் 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும், ஆண்டு வருமானம் ரூ. 72,000-க்குள்ளாக இருக்க வேண்டும் பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறும் இணை ஆணையர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காசி

இதனிடையே, தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் நடைபெறுகின்றது. இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன. அரசின் இந்த அறிவிப்பால் ஆன்மிக சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

From around the web