ஒரே நாளில் கோடீஸ்வரரான தாத்தா.. ரூ.5 கோடியை செலவு செய்ய திணறல் !!

 
dsf

ஒரே நைட்டில் அல்லது ஒரே பாட்டில் கோடீஸ்வரராக மாறுவது எல்லாம் சினிமாவில்தான் நடக்கும். அதையும் பார்த்து ரசிகர்கள் கைத்தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்வர். அதுவே நிஜத்தில் நடந்தால் கொண்டாட்டம்தான். 

அட ஆமாங்க.. ஒரே நைட்டில் ஒபாமாவாக மாறியுள்ளார் நம்மூர்காரர். பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள தேராபஸ்ஸி பகுதியை சேர்ந்தவர் துவாரகா தாஸ். 88 வயது முதியவரான தாஸ், பம்பர் குலுக்கலில் லாட்டரி வாங்கி உள்ளார். இதில் அவருக்கு ரூ. 5 கோடி பரிசு விழுந்துள்ளது. பரிசு தொகையில் வரி பிடித்தம் போக ரூ.3.5 கோடி அவருக்கு கிடைக்கும். இதனால் துவாரகா தாஸ் அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் திகைத்துள்ளனர். உண்மையில் இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வது என்றுகூட தெரியவில்லை என்றும் கூறுகின்றனர் அப்பாவிதனமாக.

sdfsdf

அவருக்கு லாட்டரி விற்பனை செய்த கடைகாரர் கூறுகையில், துவாரகா தாசின் பேரன் நிகில் ஷர்மா என்னிடம் வந்து அவருடைய தாத்தா குறிப்பிட்ட இலக்கங்களை கொண்ட லாட்டரி சீட்டை கேட்டதாக கூறினார். அதன்படி அந்த டிக்கெட்டை கொடுத்தேன். தற்போது அந்த டிக்கெட்டுக்கு மெகா பம்பர் பரிசு கிடைத்துள்ளது. அவருக்கு லாட்டரி சீட்டை விற்றதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்றார். 

பரிசு கிடைத்தது குறித்து அவர் கூறுகையில், ஒரு நாள் பம்பர் பரிசு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் இருந்தேன். ஒவ்வொரு மாதமும் லாட்டரி சீட்டுகளை வாங்கினேன். அப்போது பணம் வீணாகினாலும் இப்போது பெரும் பலன் கிட்டியுள்ளதாக கூறினார். அந்த பணத்தை இப்போது என் குடும்பத்தினர் நல்ல முறையில் பயன்படுத்துவார்கள் என்றார்.

துவாரகா தாஸ் சுதந்திரத்தின்போது, பாகிஸ்தானில் இருந்து பஞ்சாப்புக்கு குடி பெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

From around the web