பெரும் சோகம்!! மேற்கூரை இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி குழந்தை பலி!!

 
மேற்கூரை

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு மாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அதிகனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது. அதேபோல் இன்று காலை தியோரியா பகுதியில் அதிகாலை ஒரு பெரிய விபத்து நடந்து அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து

தியோராவில் 2 மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுத்தது. அப்போது அந்த கட்டிடத்தில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதன்படி உயிரிழந்தவர்கள் திலீப் (35) அவரது மனைவி சாந்தினி (30) மற்றும் அவர்களது 2 வயது மகள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. 

உயிரிழந்த தம்பதி இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். நேற்று அதிகாலை அதிகாலை 3 மணியளவில் திடீரென வீட்டின் மேல்கூரை இடிந்து இவர்கள் மீது விழுந்தது. இதனால் வீட்டில் புகைமூட்டம் சூழ்ந்தது. மேலும் மேற்கூரை இடிந்து விழுந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியிருந்த 3 பேரையும் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் மீட்டனர். இருப்பினும் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை அறிந்த அக்கம்பக்கத்தினர் கவலையடைந்தனர்.

போலீஸ்

விபத்து நடந்த உடனேயே உஷாரான  போலீசார் அங்கிருந்து மற்ற கட்டிவாசிகள் உடனடியாக தங்கள் வீட்டை விட்டு பத்திரமாக வெளியேற்றினர். கடந்த இரண்டு மூன்று நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த கட்டிட விபத்து நடந்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.நள்ளிரவு நேரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

From around the web