பெரும் சோகம்.. பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு உயிரைவிட்ட இளைஞர் !!

 
snake

பாம்பை கழுத்தில் சுற்றி செல்பி எடுத்த இளைஞர், அதே பாம்பு கடித்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தூளூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டா ரெட்டி (28), என்ற இளைஞர் ஜூஸ் கடை நடத்தி வந்தார். இவர் வழக்கம்போல் கடையில் இருந்து நேற்று முன்தினம் வீட்டிற்கு செல்ல பேருந்து நிலையம் சென்றுள்ளார். அங்கு, பாம்பாட்டி ஒருவர் பாம்பை வைத்து வித்தை காட்டிக் கொண்டு இருந்தார். 

இதனைக் கண்ட மணிகண்டா ரெட்டிக்கு பாம்புடன் செல்பி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டு, இதனை பாம்பாட்டியிடம் கூறியுள்ளார். இதற்கு பாம்பாட்டி மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் பாம்பாட்டியை வற்புறுத்தி பணம் தருவதாக கூறி தன்னுடைய கழுத்தில் பாம்பை சுற்றி விட வேண்டும் என கேட்டுள்ளார்.

selfi

மணிகண்டா ரெட்டி பணம் தருவதாக கூறியதால் சம்மதம் தெரிவித்து பாம்பை மணிகண்டா ரெடியின் கழுத்தில் சுற்றிவிட்டார். அப்போது மணிகண்டா ரெட்டி பாம்புடன் செல்பி எடுத்து கொஞ்சினார். பின்னர் தனது கழுத்தில் இருந்து பாம்பை எடுத்தபோது பாம்பு திடீரென மணிகண்டாவை கடித்து விட்டது. உடனே பாம்பை கழுத்தில் இருந்து வீசி எறிந்து விட்டு வலியால் அலறி துடித்தார். 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மணிகண்டா ரெட்டியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கந்துகோல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்புடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

From around the web