சாதனை மகனுக்கு தலைவர்கள் வாழ்த்து!!

உலக தடகள  சாம்பியன்ஷிப்  தொடரில்  வெள்ளிப்பதக்கம்  வென்ற  நீரஜ்  சோப்ராவுக்கு   பிரதமர்  மோடி,  முதலமைச்சர் மு..ஸ்டாலின்  உள்ளிட்ட  தலைவர்கள் வாழ்த்து  தெரிவித்துள்ளனர்.

 
வாழ்த்து

18-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இதில் இறுதி போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தனது 4-வது வீச்சில் ஈட்டியை 88.13 மீட்டர் தூரத்திற்கு வீசினார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா 2-வது இடம்பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.

உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற  நீரஜ் சோப்ராவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்அந்த வகையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்டுவிட்டர் பதிவில், உலக ஷாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும், நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றது இந்திய விளையாட்டுத் துறைக்கு ஒரு சிறப்பான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நீரஜ் சோப்ரா மீண்டும் வரலாற்றை எழுதியுள்ளதாகவும், உலக அரங்கில் நீரஜ் சோப்ராவின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியை நினைத்து இந்தியா பெருமைப்படுவதாகவும்நீரஜ் சோப்ராவுக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

From around the web