மகிழ்ச்சி!! துபாயில் உருவானது புதிய இந்து கோவில்!! இந்து மக்களின் கனவு நிறைவேறியுள்ளது..!!

 
துபாய் இந்து கோவில்

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில்  புதிதாக இந்து கோவில் ஒன்று கட்டப்பட்டது. இந்த கோயிலானது, ஏற்கெனவே அமைந்துள்ள சிந்தி குரு தர்பார் கோயிலின் விரிவாக்கம் ஆகும். சிந்தி குரு தர்பார் கோவிலானது, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலை கட்டுவதற்காக கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கோவில் கட்டுமான பணிக்கான அடித்தளம் போடப்பட்டது. துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக கோவிலின் கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது. கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பின் tஹற்போது அனைத்து பணிகளும்  நிறைவடைந்துள்ளன.  இந்நிலையில் அக்டோபர் 5-ம் தேதி அதாவது நாளை  முதல் பொதுமக்கள் பார்வைக்காக இந்த கோயில் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட உள்ளது.ட் இதனையடுத்து தற்போது இன்று மாலை 5.30 மணிக்கு இந்த புதிய கோவில்  திறப்பு விழா  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக ஏராளமானோர்  கலந்துகொண்டனர்.

துபாயின் புதிய இந்து கோவில் காலை 6:30 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். கூட்ட நெரிச்லை தவிர்க்க பார்வையாளர்களுக்கு கோவில் நிர்வாகம் கியூஆர் குறியீடு அடிப்படையிலான முன்பதிவு முறையை செயல்படுத்தியுள்ளது.  இந்த கோவில் அனைத்து மதத்தினரையும் வரவேற்கிறது மற்றும் வழிபாட்டாளர்கள் மற்றும் பிற பார்வையாளர்களுக்கு நுழைவதற்கும் அனுமதி அளித்துள்ளது. ஜெபல் அலி பகுதியில் பல தேவாலயங்கள் மற்றும் சீக்கிய குருத்வாரா உள்ள நிலையில், துபாயின் புதிய இந்து கோவில் அமைக்கப்பட்டிருப்பதன் மூலம் துபாயில் வசிக்கும் இந்து மதத்தினரின் பல ஆண்டு கனவு நிறைவேறியுள்ளதாக பலர் தெரிவித்துள்ளனர்.

From around the web