அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் அதிகனமழை!! வீட்டை விட்டு வெளியே போகாதீங்க!!

 
மழை

தமிழகத்தில் டிசம்பர் 7ம் தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி மாண்டஸ் புயலாக வலுப்பெற்றது. இதன்  காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில்  டிசம்பர் 8ம் தேதி  முதல் நேற்று அதிகாலை வரை அதிகனமழையும், சூறாவளிக் காற்றும் வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு பகுதியில் மரங்கள் சாய்ந்து, மின்கம்பங்கள் இடிந்து விழுந்துள்ளன.

தேசிய மற்றும் தமிழக பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்ஓது இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் தமிழகத்தில் டிசம்பர்13ம் தேதி வரை மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில்  அடுத்த 2 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி சென்னை, திருவள்ளூர், சேலம், தருமபுரி, திருப்பூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை  மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழை தொடரும்!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

சென்னை, தென் மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த மாண்டஸ் புயல் மாமல்லபுரத்திற்கு அருகே கரையை கடந்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் கனமழை பொழிந்தது. இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

வானிலை ஆய்வு மையம்

மாண்டஸ் புயல் கரையைக் கடந்து படிப்படியாக வலுவிழந்து வரும் நிலையில் தற்போது உள் தமிழகத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து வருவதாகவும் இது வட உள் மாவட்டங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என்றும் இதனால் இன்று முதல் வருகிற 13-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

From around the web