இன்று 10 மாவட்டங்களில் அதிகனமழை!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கடலூர், டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம்.
17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கரூர், நாமக்கல், திருச்சி, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதே போன்று நாளை செப்டம்பர் 2ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 5 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!