சினிமா பாணியில் கொள்ளையடித்து சாலையோர மக்களுக்கு உதவி!! திருடன் பலே வாக்குமூலம்!!

 
அப்பு

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர், சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 55 வயதான  வரதராஜன். இவர் உடல்நலக்குறைபாடு காரணமாக மருத்துவமனையில் 2 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். திரும்பி வந்து பார்த்த போது இவருடைய வீட்டில் கொள்ளை நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இந்த கொள்ளை சம்பவத்தால் பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல் போனது தெரியவந்தது. உடனே இது குறித்து புது பெருங்களத்தூர் பீர்க்கங்காரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

கொள்ளை திருட்டு

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைபற்றி ஆய்வு செய்தனர். அப்போது தனி ஒருவனாக வீட்டை நோட்டமிட்டு ஆள் இல்லாததை அறிந்து உள்ளே சென்று பீரோவில் இருந்த தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

கொள்ளையனின் அங்க அடையாளங்களை கொண்டு பார்த்தபோது எழும்பூர் பகுதியில் உள்ள சாலை ஓரத்தில் வசித்து வரும் அன்புராஜ் என்கிற அப்பு (33) என்பது தெரியவந்தது. இவர் மாதம் ஒரு முறை மட்டும் ரயில் மூலமாக வந்து கொள்ளையடித்துச் செல்லும் வழக்கம் உடையவர்.அதனைத் தொடர்ந்து குற்றப்பிரிவு போலீசார், எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் 10 நாட்களுக்கு மேலாக நோட்டமிட்டு அப்புவை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெருங்களத்தூரில் மட்டும் கடந்த 4 மாதங்களில் மாதம் ஒரு வீடு என 4 வீடுகளில் கொள்ளையடித்ததாக தெரிவித்தார்.

போலீஸ்

கொள்ளையடித்த நகைகளை குறித்து கேட்டபோது அந்த நகைகளை விற்று சாலையோரம் இருக்கும் மற்றும் ரயில் நிலையத்தில் வசித்து வரும் ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்ததாக அப்பு வாக்குமூலம் அளித்தார். இதனையடுத்து அவரிடம் மீதமிருந்த 11 சவரன் நகைகளை போலீசார் கைப்பற்றினர் பின்னர் அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.திருடிய பணத்தில் ஆதரவற்றோருக்கு உணவு, உடை மற்றும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் சிறைக்கு செல்வதில் எந்த கவலையும் இல்லை எனவும் அப்பு தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web