கல்லூரி மாணவிகளுக்கு விடுமுறை: அரசு புதிய அறிவிப்பு !!

 
tryu

இன்றைய காலகட்டத்திலும் மாதவிடாய் என்ற சொல்லைக் கூட பெண்கள் ரகசியமாகவே உச்சரிக்கின்றனர். மாதந்தோறும் மாதவிடாய் நாட்களில் பெண்கள் எதிர்கொள்ளும் வலிகள் குறித்து, தங்கள் குடும்ப ஆண்களிடம் கூட வெளிப்படையாக பேசுவதற்கு அவர்கள் தயங்கி வருகிறார்கள் என பெண்ணிய ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இப்படியான நிலையில்தான் கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கேரள மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடா்பான அறிவிப்பை கேரள அரசு அண்மையில் வெளியிட்டது. அதன்படி, மாநில உயா்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் படித்து வரும் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை அளிப்பது என தற்போது கட்டாயமாக்கி அறிவித்துள்ளது.

முன்னதாக, கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த விடுமுறை நடைமுறையை அறிமுகம் செய்தது. அதாவது, படிப்பின் ஒவ்வொரு பருவத்திலும் கட்டாய 75% வருகைப் பதிவில், மாணவிகளுக்கு கூடுதலாக 2 % தளா்வு அளித்து அறிவிப்பு வெளியிட்டது. அதன் மூலமாக, மாணவிகள் 73 % வருகைப் பதிவை பெறிருந்தாலே அவர்கள் தோ்வு எழுத முடியும்.

dsf

இந்த நடைமுறையைப் பின்பற்றி, தற்போது அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் மாநில அரசு நடைமுறைப்படுத்தும் என்று மாநில உயா்கல்வித் துறை அமைச்சா் பிந்து தெரிவித்திருந்தாா். இதுகுறித்து அவர் கூறுகையில், மாதவிடாய் காலங்களில் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனா். அன்றைய நாள்களில் அவா்களுக்கு ஓய்வு தேவை என்ற மாணவா் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, கொச்சின் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்த சிறந்த முடிவை எடுத்துள்ளது. இது அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்துப்படும், என்று குறிப்பிட்டிருந்தாா்.

அதனைத் தொடா்ந்து, கேரள அரசு கல்லூரி, பல்கலைக்கழக மாணவிகளுக்கு மாதவிடாய் கால விடுமுறையை கட்டாயமாக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிகாரில் இதுபோன்ற நடைமுறை கடந்த முப்பது ஆண்டுகளாக மேலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 1992-ஆம் ஆண்டு ஜனவரியில் பிகாா் அரசு இது தொடா்பான உத்தரவை வெளியிட்டது. அதன்படி மாத விடாய் காரணங்களுக்காக இரண்டு நாள்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். நாற்பத்தைந்து வயது வரையுள்ள பெண்களுக்கு இந்த விடுமுறைச் சலுகை பொருந்தும்.

From around the web