கொடூர விபத்தி! பேருந்து மீது லாரி மோதியதில் 14 பயணிகள் பலி! 40 பேர் படுகாயம்!

 
லாரி விபத்து

அதிகாலையில் அதிர்ச்சியளிக்கும் விதமாக படு கோரமான விபத்து, பேருந்தும், லாரியும் மோதிக் கொண்டதில் நிகழ்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சம்பவம் மத்தியபிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் சுஹாகி பஹரி பகுதி அருகே பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த லாரியும், பேருந்தும் திடீரென்று பலமாக மோதிக் கொண்டது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 14 பயணிகள் பரிதாபமாக ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் காயமடைந்தனர். 

லாரி விபத்து
உடனடியாக இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் படுகாயமடைந்த 40 பேரை மீட்டனர். அவர்களில் 20 பேர் உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த படுபயங்கர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, ‘‘தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மேலும் பேருந்தில் பயணம் செய்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேச மாநில மக்கள் என்று தெரிய வந்துள்ளது.

லாரி விபத்து

தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்ட போலீசார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றமும், சோகமும் நிலவுகிறது. மேலும் சிகிச்சை பெற்று வருபவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web