தருமபுரி அருகே பயங்கரம்… கோர விபத்தில் சிக்கி 20 பேர் படுகாயம்…

 
விபத்து

பள்ளி கல்லூரி மாணவர்கள் என 20க்கும் மேற்பட்டோருடன்   சேலத்தில் இருந்து தருமபுரி மாவட்டம் அரூர் நோக்கி  தனியார் பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்து பாப்பிரெட்டிப்பட்டி அருகே சென்றுக்கொண்டிருந்த போது   பட்டுக்கோணம்பட்டி தண்ணீர் தொட்டி என்ற இடத்தில் முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்தி செல்ல முயன்றது.

விபத்து

இதில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற அரசு பேருந்து மீது அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் இரு பேருந்துகளிலும் பயணம் செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்ட சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் மூலம் பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதில், பாப்பிரெட்டிப்பட்டி பட்டுக்கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு தலை மற்றும் கால் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து

இதனிடையே விபத்து குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாப்பிரெட்டிபட்டி போலீசார் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர். பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு மற்றும் தனியார் பேருந்துகள்  மோதிகொண்ட சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

From around the web