தூத்துக்குடி அருகே திகில்… கருப்பு உருவம் விரட்டியதால் மாடியில் இருந்து குதித்த மாணவி…

 
தூத்துக்குடி திகில் சம்பவம்

தூத்துக்குடி அருகே தன்னை கருப்பு உருவம் விரட்டுவதாக கூறி பள்ளி மாணவி மாடியில் இருந்து குதித்த சம்பவம் திகிலூட்டுகிறது.  தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் அரசு உதவி பெறும் தூயமேரி மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது.   இங்குள்ள பள்ளி விடுதியில் 11 ஆம் வகுப்பு மாணவி தங்கி படித்து வருகிறார்.  இதற்கிடையே பள்ளிக்கு சென்ற மாணவி பள்ளியின் முதல் மாடிக்கு சென்று அங்கிருந்து திடீரென கீழே குதித்துள்ளார். இதனைக் கண்ட சக மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர்.   உடனடியாக   அங்கிருந்த ஆசிரியர்கள் காயமடைந்த மாணவியை மீட்டு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அந்த மாணவி மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இரு கால்களிலும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

குதித்து தற்கொலை

இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சாயர்புரம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில்  மாணவியிடமும் அவரது பெற்றோரிடமும் நடத்திய விசாரணையில் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். சம்பவத்தன்று   கருப்பு உருவம் தன்னை சில மாதங்களாக பின் தொடர்வதாகவும், தன்னுடன் விளையாடியதாகவும், தன்னை தனியாக பள்ளியின் மாடிக்கு அழைத்துச்சென்ற அந்த உருவம் இருவரும் சேர்ந்து குதித்து விளையாடலாம் என்று கூறியதால் அதன் பேச்சை கேட்டு தான் மாடியில் இருந்து குதித்ததாகவும், கீழே விழுந்த பின்னர் மேலே பார்த்தால் அந்த கருப்பு உருவம் குதிக்காமல் தன்னை ஏமாற்றி விட்டது என்றும் கூறி போலீசாரையே அதிர வைத்தார் அந்த மாணவி. மேலும் கடந்த ஒரு மாதமாகவே கருப்பு உருவம் ஒன்று தன்னை பின் தொடர்வதாக தங்கள் மகள் கூறி வந்ததாகவும், நேரில் சென்று பார்த்த போது அவருடன் எவரும் இல்லை எனவும்  மாணவியின் பெற்றோர் கூறுகின்றனர்.

one side love காதல் தோல்வி இளம்பெண் மாணவி அதிகாலை தனிமை மன அழுத்தம்

இந்த சம்பவம் தொடர்பாக தற்கொலைக்கு முயன்றதாக   போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த மாணவியின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் மனோ தத்துவ நிபுணர் மூலம் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார். இன்றைய காலக்கட்டத்தில் மாணவர்கள் அதிக மன அழுத்ததிற்கு ஆளாகி இதுப்போன்ற விபரீதங்களை செய்து வருவதாக கூறும் சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்களும் பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

From around the web