சோகம்!! இ பைக் ஷோரூமில் பெரும் தீவிபத்து!! 8 பேர் பலி!! பலர் கவலைக்கிடம்!!

 
தீவிபத்து

இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலைகள் வரலாறு காணாத அளவு சதமடித்துள்ளன. இதற்கு மாற்றாக பலரும் இபைக், இஸ்கூட்டர் வாங்க தொடங்கியுள்ளனர். இவற்றின் விற்பனை சூடு பிடிக்க தொடங்கியிருக்கும் நிலையில் பல்வேறு இடங்களில் இபைக்குகள் குறித்த விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது  

தீவிபத்து

ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் .  இந்த ஷோரூமில் நேற்று செப்டம்பர் 12ம் தேதி திங்கட்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டதால்  அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். ஆனால், ஷோரூம் செயல்பட்டு வந்த  கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ரூபி லாட்ஜில்   இருந்தவர்கள் தீயில் சிக்கி கொண்டனர்.


ஒரு  சிலர் தங்கள் உயிரைக் காப்பாற்ற ஜன்னல் வழியாக குதித்தும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை பெரும் முயற்சியுடன் தீயை அணைக்க போராடியது.  இருப்பினும்   ஏழு பேர் தீயில் சிக்கி பலியாகினர். மீட்கப்பட்டவர்களில் படுகாயமடைந்த  மேலும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.இதில்  பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. படுகாயமடைந்தவர்கள் ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீவிபத்து
விபத்து நடந்த போது லாட்ஜில் 25 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அனைவரும் மீட்கப்பட்டனரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இந்த விபத்திற்கான காரணம் குறித்து தீயணைப்பு துறையினர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் எலக்ட்ரிக் பைக் வாகனத்தில் இருந்த பேட்டரியின் மூலம் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web