உன் வாழ்வின் எல்லாமுமாக நான் இருக்கிறேன்!! சாயிபாபா அருளுரை!!

 
60 நாட்கள் விரதம் இருந்து பரவசத்துடன் உருவாகும் ` சீரடி சாய்பாபா மகிமை’ !

பூமியில் வாழும் ஜீவராசிகளை துன்பத்தளைகளிலிருந்து விடுவிக்க ஒவ்வொரு காலத்திலும் மகான்கள் தோன்றி வருகின்றனர். தம்முடைய கருணையாலும், அற்புதங்களாலும் நாம் முக்தி அடைய  வழிகாட்டி வருகின்றனர்.  அந்த வகையில் ஷீரடி சாயிபாபா வாழ்ந்த காலத்தில் பக்தர்களின் குறைகளை போக்க அவர் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம். 
அவர் அருளிய போதனைகள் பல அவற்றிலிருந்து….

எங்கும், எப்போதும் துணை இருப்பேன்!! சாயிபாபா அருளுரை!!


வாழ்வில் எந்த சூழ்நிலையில் நீ வாழ்ந்து வந்தாலும், எது உன்னை துன்புறுத்தினாலும் கவலையே கொள்ளாதே. எது வந்தாலும் எதிர்த்து நின்று போராடு. நேர்மையாக நீ எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் துவண்டு போகாதே.மனித வாழ்வில் ஆசை, இன்பம், துன்பம், துயரம் இதற்கு முடிவு இல்லை. அனைத்தையும் சகித்து கொண்டு கடந்து வந்து வா. பயத்தை விலக்கிடு. உன் வாழ்வின் எல்லாமுமாக நான் இருக்கிறேன்.

எங்கும், எப்போதும் துணை இருப்பேன்!! சாயிபாபா அருளுரை!!


மற்றவர்களின் துயரத்தில் பங்கெடுக்கும் நீ உனக்கு கஷ்டம் வந்ததும், ஏன் வாழ்வில் பிடிப்பில்லாமல் இருக்கிறாய்?
அமைதியாக இரு .உனது துக்க நாட்கள் முடிந்து போயின. நீ விரைவில் வாழ்வின் அனைத்து இன்பங்களையும் கிடைக்கப் பெறுவாய். உனது வேண்டுதல் கேட்கப்பட்டது. அது எப்படியும் நிறைவேறியே தீரும். என் வார்த்தைகளில் நம்பிக்கை கொள். உன் தாயாக தந்தையாக வாழ்வின் அனைத்துமாக எங்கும், எப்போதும் துணை இருப்பேன். நல்லதே நடக்கும்.
ஓம் ஸ்ரீ சாய் ராம்.

From around the web