அட்ஜெஸ்ட் செய்து கொள்ளாததால் பட வாய்ப்புக்களை இழந்தேன்!! பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!!

 
மல்லிகா ஷெராவத்

பெரிய ஹீரோக்கள் அட்ஜஸ்ட் செய்ய கேட்ட போது நான் ஒப்புக் கொள்ளாததால் பல பட வாய்ப்புகளை இழந்தேன் என்று பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். இதனால் பாலிவுட் திரையுலகில் பலர் சிக்கலில் மாட்டிக் கொள்வோமோ என்று விழி பிதுங்கி நிற்கிறார்கள்.பாலிவுட் திரையுலகில் நடிகை மல்லிகா ஷெராவத் 2002ம் ஆண்டு காலடி எடுத்து வைத்தார். 2004ம் ஆண்டு ‘மர்டர்’ என்ற படத்தின் மூலம் அவரை மக்கள் அடையாளம் கண்டு ரசிக்க ஆரம்பித்தனர். மேலும் தமிழில் ‘கமல்ஹாசனுடன் தசாவதாரத்தில் நடித்துள்ளார். மேலும் சிம்புவின் ‘ஒஸ்ததி’ படத்தில் ஒரு பாடலுக்கும் நடமானடியுள்ளார்.

மல்லிகா ஷெராவத்
நடிகை மல்லிகா ஷெராவத் தனது திரையுலக பயணம் குறித்து கூறும்போது, ‘பல முன்னணி நடிகர்கள் என்னை படத்தில் சேர்த்துக் கொள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தனர். அவர்களுடன் நள்ளிரவு படுக்கைக்கு நான் செல்லாததால் அவர்களால் நான் புறக்கணிக்கப்பட்டேன். அப்படியரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை. என்னுடைய ஆளுமையும் அதை ஏற்கவில்லை. இருப்பினும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டேன். மேலும் நல்ல கதாபாத்திரங்களையே நான் தேர்வு செய்ய முற்சித்தேன். அனைவரை போல நானும் சில தவறுகளை செய்தேன்.

இதனால் சில கதாபாத்திரங்கள் வெற்றி பெற்றன. சில தோல்வியடைந்தன. இருப்பினும் எனது திரைப்பயணம் சிறப்பானதாக அமைந்துள்ளது’’ என்று தெரிவித்தார். முன்னணி நடிகர்கள் நள்ளிரவு படுக்கைக்கு அழைத்தனர் என்று கூறிய போதிலும் அவர்கள் யார் என்ற தகவலை மல்லிகா ஷெராவத்  வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மல்லிகா ஷெராவத்

தற்போது அவர் ஆர்கே.ஆர்கே பட புரமோஷன் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளார். பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் மல்லிகா ஷெராவத்தின் இதுபோன்ற தகவல்கள் பெரும் பாலிவுட் திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்ற அச்சம் நிலவுகிறது.கடந்த சில நாட்களாக பாலிவுட் நடிகைகள் தங்களுக்கு நேர்ந்து வரும் கொடுமைகளை வெளியில் சொல்லி வருகிறார்கள். நடிகை நீது சந்திரா, தனுஸ்ரீ உள்ளிட்டவர்கள் பிரச்சினை ஓயாத நிலையில் தற்போது புதிய பூதம் கிளம்பியுள்ளது என்றே சொல்ல வேண்டும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web