2 மாசத்துல 10 முறை கொல்ல முயற்சி பண்ணேன்! காதலி பரபரப்பு வாக்குமூலம்!

 
கிரீஷ்மா

கேரளாவையே உலுக்கிய ஷாரோன்ராஜ் கொலை சம்பவத்தில் கொலைக்கார காதலி அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கேரள மாநிலம் மூறியன்கரை பகுதியை சேர்ந்தவர் ஷாரோன்ராஜ். வயது 23. இவர் குமரி மாவட்டம் நெய்யூர் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இதே கல்லூரியில் குமரி ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்த கிரீஷ்மா    என்பவரும் பயின்று வந்துள்ளார்.  ஷாரோன்ராஜும் கிரீஷ்மாவும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.  வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை பிடித்து போனதால் கிரீஷ்மா, காதலன் ஷாரோன்ராஜை தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி காதலனை ஆசை வார்த்தை பேசி வீட்டுக்கு வரவழைத்த கிரீஷ்மா   காதலனுக்கு தெரியாமல் கசாயத்தில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த காதலன்   உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 25-ந் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இந்த கொடூரமான கொலை சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கிரீஷ்மா

 

மேலும் இந்த கொலை வழக்கு பாறசாலை போலீசாரிடம் இருந்து   திருவனந்தபுரம் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் 30-ந் தேதி போலீசார் கிரீஷ்மாவை வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொன்றதை ஒப்புக் கொண்டார். தன்னுடைய எதிர்கால திருமண வாழ்க்கைக்கு காதலன் இடையூறாக இருப்பார் என கருதி அவரை கொலை செய்ததாக  கூறினார். பின்னர் அவரை போலீசார் கைது செய்து 31-ந் தேதி அன்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆனால் நெடுமங்காடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கழிவறையில் கிரீஷ்மா கிருமிநாசினியை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் அவர் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே கொலைக்கு உடந்தையாக இருந்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, மாமா நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.  

போலீஸ்

இதனைத்தொடர்ந்து கிரீஷ்மா உடல்நிலை தேறிய நிலையல் அவர் அட்டக்குளங்கரை சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து நெய்யாற்றின்கரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரீஷ்மாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது 7 நாட்கள் கிரீஷ்மாவை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு போலீசாருக்கு அனுமதி வழங்கியது.   இந்நிலையில்,  நெய்யூர் பகுதிக்கு க்ரீஷ்மாவை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது 2 மாதங்களில் காதலன் ஷாரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் போலிசார் கிடுக்குபிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் இறுதியில் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web