டிடிவியை சந்தித்து பேசுவேன்.. அந்தர் பல்டியடித்த ஓபிஎஸ்! தலையை சொறிந்த கழக கண்மணிகள்!

 
ஓபிஎஸ்

வாய்ப்பு கிடைத்தால் டிடிவி தினகரனை சந்தித்து பேசுவேன் என்று விமான நிலையத்தில் கூடியிருந்த தொண்டர்களை அந்தர் பல்டியடித்து தலையைச் சொறிய வைத்துள்ளார் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான்.. ஆனால் பயணிக்கும் பாதைகள் வேறு. அதிமுகவை யாரும் மிரட்ட முடியாது என்று  திருச்சி விமான நிலையத்தில் இன்று பத்திரிக்கையாளர்களுக்கு முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். 

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பன்னீர்செல்வம், திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான். ஆனால் அவர்கள் பயணிக்கும் பாதைகள் வேறு.
அதிமுகவில் தொண்டர்கள் இடையே ஒற்றுமையுள்ளது. ஆனால் தலைமையில் தான் பிரச்சனை உள்ளது என்ற மாயத் தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது என்று புகார் கூறினார் .

தோல்விக்கு யார் காரணம்!? ஈபிஎஸ், ஓபிஎஸ் வலுக்கும் சர்ச்சை!

அதிமுகவில் பிளவு ஏற்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடிக்க பாஜக திட்டமிடுவதாக வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறிய ஓபிஎஸ்., அதிமுகவையோ அதன் தொண்டர்களையோ யாரும் பிளவு படுத்தி பார்க்க முடியாது. அதிமுகவை யாரும் மிரட்டவும் முடியாது என்றார். 

அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்த டிடிவி, அதிமுகவுடன் கூட்டணி சேர தயார் என  அறிவித்துள்ளது குறித்து கேட்ட போது, அது நல்ல கருத்து தான் என்றும், அதனை நான் வரவேற்கிறேன். தஞ்சாவூரில் வாய்ப்பு இருந்தால் அவரை நேரில் சந்தித்து பேசுவேன் என்றார்.

இபிஎஸ், ஓபிஎஸ்

அதிமுக தலைமைக்கு பன்னீர்செல்வம், ஆட்சி நிர்வாகத்தில் பழனிச்சாமி என பழைய நிலை ஏற்பட்டால் இருவரும் இணைய வாய்ப்புள்ளதா? என்ற பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த பன்னீர்செல்வம், வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். எம்ஜிஆர் உருவாக்கிய  சட்ட விதிமுறைகளுக்கு எந்த ஒரு மாசும் ஏற்பட்டு விடக் கூடாது. ஜனநாயகம் கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காக தான் இந்த தர்மயுத்தம் என்றார்.

என்ன வாசகர்களே தலை சுத்துதா? விடுங்க.. இதுக்கு மேலேயும் கேள்வி கேட்டா அரசியல்ல  நிரந்தர எதிரியும் இல்லை... நண்பனும் இல்லைன்னு சொல்வாங்க. அந்த பக்கமா திரும்பி, அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பான்னு கவுண்டமணியோட டயலாக் போடுவாங்க.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web