பள்ளியை விட்டு வரமாட்டேன்!! அம்மாவிடம் அழுது அடம்பிடித்த மழலை!!

 
குழந்தை ஹர்ஷிதா

பொதுமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லமாட்டேன் என்று தான் அடம் பிடிக்கும். பெற்றோர்களும் தங்களது குழந்தையை சமாதானம் செய்து வம்படியாக பள்ளிக்கு அழைத்து செல்வர். ஆனால் இங்கு ஒரு மழலை பள்ளியை விட்டு வீட்டிற்கு வர மாட்டேன் என்று அம்மாவிடம் அடம்பிடித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்துவதுடன் ரசிக்கவும் வைத்துள்ளது.

குழந்தை ஹர்ஷிதா

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் மழலை கல்வி பயின்று வருகிறார் குழந்தை ஹர்ஷிதா.   இவரது தாயார் இவரை பள்ளி முடிந்து அழைத்துச் செல்ல பள்ளிக்கு வழக்கம்போல் வந்துள்ளார். அப்போது பள்ளியின் வாசலில் பள்ளியை விட்டு வீட்டிற்கு வரமாட்டேன் என குழந்தை அழுது அடம் பிடித்து உள்ளது.

குழந்தை ஹர்ஷிதா

வெகு நேரம் அவரது தாயார் சமாதானப்படுத்தியும் அந்த குழந்தை வீட்டிற்கு செல்ல மறுத்துள்ளது. இந்த நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. பொதுவாக குழந்தைகள் வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்ல அடம் பிடிப்பது வழக்கம். ஆனால் குழந்தை ஹர்ஷிதா பள்ளியிலிருந்து வீட்டிற்கு செல்ல அடம் பிடித்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன் ரசிக்கவும் வைத்துள்ளது.

From around the web