மறுபடியும் மொதல்..ல இருந்தா!! நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!!

 
காற்றழுத்த தாழ்வு பகுதி

தமிழகத்தில் அக்டோபர் 29 முதல் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. அதன் பிறகு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.இந்த மழை மேலும் தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை

கடந்த வாரத்தில் கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை அடிப்படையில் 29 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.நேற்று முதல் படிப்படியாக மழை குறையத் தொடங்கியிருக்கும் நிலையில் இன்னும் சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை விட்டு விட்டு பெய்துவருகிறது. அத்துடன் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

மழை

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் இன்று நவம்பர் 15ம் தேதி தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் தமிழக கடலோர பகுதிகளில் நவம்பர் 19ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அன்று தொடங்கும் மழை  படிப்படியாக தீவிரமடைய வாய்ப்பு உள்ளதாகவும்  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web