தரலைன்னா கொன்னுடுவேன்... கத்தியைக் காட்டி, பெண் காவலரை மிரட்டிய பாஜக இளைஞரணி தலைவர் கைது!

 
ரஞ்சித்குமார்

பெண் காவலரிடம் பணம் கேட்டு மிரட்டிய பாஜக இளைஞரணி தலைவர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் கள்ளக்குறிச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் பிரமுகர்கள் தொடந்து வன்முறை செயல்களில் ஈடுபட்டு அடாவடித்தனம் செய்து வருகின்றனர். கட்சி பேதமில்லாமல், அரசியல் பிரமுகர்கள் இப்படி வன்முறையிலும், வசூல் வேட்டையிலும் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வரும் நிலையில், போலீசாரிடமே பணம் கேட்டு  மிரட்டியது அதிர வைத்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கோட்டைமேடு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் சவிதா. இவர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். கள்ளக்குறிச்சி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் ரஞ்சித்குமார். இவர் கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவராக உள்ளார்.

கள்ளக்குறிச்சி காவல்நிலையம்

இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக சவிதாவும், ரஞ்சித்குமாரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாகவும் வங்கியில் சுமார் 4.80 லட்சம் ரூபாய் சொசைட்டி லோன் பெற்று இரண்டு லட்சத்தை ரஞ்சித்குமாரிடம் சவிதா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி துருகம் சாலையில் உள்ள சர்தார் ஷெரீப் பஞ்சர் கடை அருகே நின்று கொண்டிருந்த சவிதாவை ரஞ்சித்குமார் வழிமறித்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கொடுக்கவில்லை என்றால் கத்தியால் குத்தி கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி

இதனால் அதிர்ச்சியடைந்த சவிதா, இது குறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், உதவி காவல் ஆய்வாளர் சந்திரன் வழக்கு பதிவு செய்து பெண் காவலரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சி பாஜக இளைஞரணி தலைவர் ரஞ்சித்குமாரை கைது செய்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web