இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து திருமணம்.. யார் அந்த பாகிஸ்தான் பெண் !!

 
இர்கா ஜீவானி

பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் காதலுக்காக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து உத்தரப் பிரதேச வாலிபரை திருமணம் செய்தார். பெங்களூருவில் வாழ்ந்தவந்த அந்த தம்பதியை காவல்துறை கைது செய்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முலாயம் சிங் (26) என்ற இளைஞர் பெங்களூருவில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு லூடோ விளையாட்டில் ஆர்வம் அதிகம். அவ்வாறு செல்போனில் லூடோ விளையாடிக் கொண்டிருக்கும் போது, அதே விளையாட்டை விளையாடும் பெண் ஒருவர் ஆன்லைனில் அறிமுகமானார். முதலில் இருவரும் விளையாடினாலும் பின்னர் சிறிது காலத்தில் பேசத் தொடங்கினர். 

இர்கா ஜீவானி

இந்த நட்பு இருவருக்கும் இது காதலாக மாறியது. பின்னர் சிறிது காலத்திற்கு பின்னர் தான் அந்த பெண் இந்தியாவை சேர்ந்தவர் அல்ல, பாகிஸ்தானில் உள்ள ஹைதராபாத்தை சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. 19 வயதான அந்த பெண் பெயர் இர்கா ஜீவானி என்பதும், தான் ஹைதராபாத்தில் வசிப்பதாகக் கூறி பழகியுள்ளார் என்பதும் தெரியவந்தது.

இருப்பினும் இருவரும் காதலை விட முடியாமல் திருமணம் செய்ய முடிவெடுத்தனர். அதன்படி, அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி நேபாள நாட்டின் காத்மண்டுவுக்கு முலாயம் வரச் சொல்லியுள்ளார். அந்த பெண்ணும் நேபாளத்திற்கு வர அங்கு அந்த பெண்ணை இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டார். 

இர்கா ஜீவானி

பின்னர் நேபாளத்தில் இருந்து பீகார் வழியாக இந்தியா வந்து, பெங்களூருவில் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் பெயரை ராவா யாதவ் என மாற்றி அவருக்கு ஆதார் அட்டையும் பெற்றுள்ளார். இதனால் அவர்கள் வசிக்கும் பகுதியில் யாருக்கும் அப்பெண் மீது சந்தேகம் வரவில்லை. ஆனால், மாநில உளவுத்துறையின் சந்தேகத்தின் பேரில் அந்த பெண் காண்காணிக்கப்பட்டார்.

அதன் அடிப்பைடயில் நடைபெற்ற சோதனையில் உண்மை அம்பலமானது. இருவரையும் பெங்களூரு காவல்துறை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளது. தொடர் நடவடிக்கையாக அந்த பெண்ணை வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர். அவரை திருமணம் செய்த இளைஞர் முலாயமை சிங் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளார்.

From around the web