ப்ளாஸ்மாவுக்கு பதில் ஜூஸை நரம்பில் ஏற்றிய கொடுமை! 10 பேர் கைது!

 
ட்ரிப்ஸ் பழச்சாறு

நோயாளிக்கு ப்ளாஸ்மாவுக்கு பதிலாக சாத்துக்குடி பழச்சாற்றை ட்ரிப் மூலமாக நரம்பில் ஏற்றிய வழக்கில், போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதீப் பாண்டே. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில் அவருக்கு இரத்த அணுக்களை அதிகரிக்க 'டிரிப்ஸ்' மூலம் ரத்த பிளாஸ்மா ஏற்றப்பட்டது. 3 ரத்த பிளாஸ்மா ஏற்றப்பட்ட நிலையில் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நோயாளி பிரதீப் பாண்டே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், நோயாளிக்கு 'டிரிப்ஸ்' மூலம் ஏற்றப்பட்டது ரத்த பிளாஸ்மா அல்ல என்பதும் அது சாத்துக்குடி பழச்சாறு என்பதும் தெரிய வந்துள்ளது. பிளாஸ்மாவுக்கு பதில் சாத்துக்குடி பழச்சாறு பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ளது. 

ட்ரிப்ஸ் மருத்துவர் டாக்டர் மருத்துவமனை

அந்த பாக்கெட்டில் இருந்த சாத்துக்குடி பழச்சாற்றை 'டிரிப்ஸ்' மூலம் நோயாளிக்கு நரம்பு வழியே ஏற்றியுள்ளனர். இதில், உடல்நிலை மோசமடைந்த நோயாளி பிரதீப் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மருத்துவமனைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்துள்ளனர். தாங்கள் பிலாஸ்மாவை மட்டுமே விற்பனை செய்ததாக உறுதியாக கூறுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் ஆய்வு முடிவுகள் வெளி வந்தால் மட்டுமே உண்மை தெரிய வரும் என காவல் துறை உயர் அதிகாரி ஷைலேஷ் பாண்டே கூறியுள்ளார். 

ட்ரிப்ஸ் மருத்துவர் டாக்டர் மருத்துவமனை

மேலும், "சமீப நாட்களாக டெங்கு பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், பிலாஸ்மாவின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை பயன்படுத்தி ஏழை மக்களிடம் இவர்கள் அதிக அளவில் பணத்தை வசூல் செய்து வருகிறார்கள். எங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நாங்கள் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறோம்" என்று போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web