போட்றா வெடிய!! இந்தியா வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது!! ரசிகர்கள் ஆரவாரம்!!

 
இந்தியா


5வது டி20 ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை எதிர்த்து ஆடிய இந்தியா அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. சுழற்பந்து வீச்சாளர்கள் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தனர். இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அதன்படி டி20 தொடரில் விளையாடியது. இதில் 4க்கு-1 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி பெரும் சாதனை புரிந்துள்ளது.இந்திய அணி கடந்த 29ம் தேதி முதலாவது டி20 போட்டியில் விளையாடியது. இதில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வெற்றி பெற்றது. 

இந்தியா
அதைத்தொடர்ந்து கடந்த 1ம் தேதி நடத்த ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் 5 விக்கெட் வித்தியாசத்திலும், ஆகஸ்ட் 2ம் தேதி நடந்த ஆட்டத்திலும் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த 4வது ஆட்டத்தில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி அபார வெற்றி பெற்று தொடர் சாதனைகளை புரிந்தது.வெஸ்ட் இண்டீசுக்கு எதிரா 5வது டி20 போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் லாடர்ஹில் நகரில் நேற்று (7ம் தேதி) நடைபெற்றது. இந்தியா ஏற்கனவே 3 போட்டிகளை வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

எனவே ரோகித்சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி களம் கண்டது. இந்த அணியில், ஸ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ரவி பிஷ்னாய் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய அணி டாஸ் வென்றதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இஷான் கிஷன்  தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், 11 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கும், அணியினருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி 40 பந்துகளில் 64 ரன்களை அடித்து விளாசினார். இளம் வீரர் தீபக் ஹ¨டா 38 ரன்கள் எடுத்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பில் இந்திய 188 ரன்களை எடுத்தது.இதன் மூலம் வெஸ்ட்  இண்டீஸ் 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அந்த அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ஹோல்டர் டக் அவுட் ஆகி வெளியேறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவரைத் தொடர்ந்து புருக்ஸ் 13 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். டிவோன் தாமஸ் 10 ரன்கள், கேப்டன் பூரான் 3 ரன்கள்,  ரோவ்மேன் பவல் 9 ரன்கள் என சொற்ப ரன்களில் வீரர்கள் அடுத்தடுத்து  ஆட்டம் இழந்தனர். இதற்கு காரணமாக விளங்கியது இந்திய பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சுதான்.

இந்தியா வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சிறிதளவு நம்பிக்கை கொடுத்தவர் சிம்ரன் ஹெட்மயர். இவர் நின்று விளையாடி அரை சதத்தை கடந்தார். வெஸ்ட் இண்டீஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 15.4ஆவது ஓவரில் 100 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. எனவே இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை கைப்பற்றி சாதனை புரிந்தது. சுழற்பந்து வீச்சாளர்களின் அபார திறமையால் 10 விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ரவி பிஷ்னாய் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை எடுத்து பார்வையாளர்களை நுனி நாற்காலிக்கே கொண்டு வந்தார். 16 ரன்கள் விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். அச்சர்பட்டேல், குல்திப் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

அதிலும் குறிப்பாக ரவி பிஷ்னாய் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலின் விக்கெட்டை தொடர்ந்து 4 முறை கைப்பற்றியது பெரும் வரவேற்பை பெற்றது. 3 முறை சர்வதேச போட்டிகளிலும் 1 முறை ஐபிஎல் போட்டியிலும் வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்த்து விளையாடிய இந்திய அணி 4க்கு1 என்ற கணக்கில் வெற்றியை பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றியை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web