14ஆவது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜக்தீப் தன்கர்!!

நாட்டின் 14 ஆவது  குடியரசு  துணைத்  தலைவராக  ஜக்தீப்  தன்கர்   பதவியேற்றுக்  கொண்டார்.

 
பதவியேற்றார் ஜக்தீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவராக இருந்த வெங்கையா நாயுடுவின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையில், 14ஆவது குடியரசு துணைத் தலைவருக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார். இந்நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஜக்தீப் தன்கருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதனைத் தொடர்ந்து மாநிலங்களவைத் தலைவராகவும் அவர் செயல்படுவார்.

இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு,   உள்ளிட்டோர் பங்கேற்றனர். 71 வயதான ஜக்தீப் தன்கர் ராஜஸ்தான் மாநிலம் கிதானா பகுதியைச் சேர்ந்தவர். வழக்கறிஞருக்குப் படித்த இவர், அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1989ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது சந்திரசேகர் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் இருந்துள்ளார். 2019- ஆம் ஆண்டு மேற்குவங்க மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜெகதீப் தன்கர் 3 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

From around the web