பெண் வட்டாட்சியருக்கு சிறை தண்டணை?! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

 
உயர்நீதிமன்றம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள கடலாடி கிராமத்தில் பொதுப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையில்  ‘‘12 வாரங்களில் மனுதாரரின் கோரிக்கை குறித்து பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும்’’ என்று கடந்த 2017 டிசம்பர் மாதத்திலேயே உத்தரவை பிறப்பித்தது. ஆனாலும் நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் முறையாக அமல்படுத்தவில்லை எனக்கூறி முருகன் மீண்டும் 2018ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார்.

court order

இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து தமிழக அரசு தெரிவித்த பதிலில், 4 வாரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவோம் என்று  உறுதியளித்தது.இந்நிலையில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு 4 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் அவற்றை அகற்றாதது நீதிமன்றத்தை வேண்டுமென்றே அவமதிக்கும் செயலையே காட்டுகிறது. எனவே சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு சிறை தண்டனை விதிக்கப் போகிறோம்’’ என்று அதிரடியாக அறிவித்தனர்.

இது குறித்து மீண்டும் தமிழக அரசு வெளியிட்ட பதிலில், 2 நாட்களில் ஆக்கிரமிப்புகள் நிச்சயம் அகற்றப்ப்பட்டுவிடும்’’ என்று கூறியது. ஆனால் நீதிபதிகள் இந்த பதிலை ஏற்க மறுத்ததுடன், கலசப்பாக்கம் தாலுகாவில் அப்போது பணிபுரிந்த பெண் வட்டாட்சியரை இந்த வழக்கில் குற்றவாளி என அறிவித்தது.மேலும் அதற்கான தண்டனை விவரங்களை ஆகஸ்ட் 5ம் தேதி  அறிவிப்போம். எனவே அவர் கோர்ட்டில் நேரில் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று அதிரடியாக உத்தரவை பிறப்பித்தனர்.

thiruvannamalai

 2018ம் ஆண்டு முதல் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் எத்தனை முறை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தாலும் அவர்கள் தொடர்ந்து அதனை அவமதித்துக் கொண்டே இருக்கிறார்கள். இப்போது நாங்கள் எடுத்து இருக்கும் நடவடிக்கை வெறும் ஆரம்பம்தான்’’ என்று எச்சரிக்கை விடுத்தார்.நீதிமன்ற உத்தரவுகளை அவமதிக்கும் அரசு அதிகாரிகள் இனி தங்கள் பணியை சரியாக செய்வார்கள் என்று பொது மக்கள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web