பிரசித்திப்பெற்ற கோயிலின் இணை ஆணையர் மறைவு!!
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ளது கபாலீஸ்வரர் சிவன் கோவில். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்நிலையில் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலை நிர்வகித்து வந்த இணை ஆணையர் டி.காவேரி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
சென்னை திருவல்லிகேணியை சேர்ந்தவர் காவேரி. அவர் கபாலீஸ்வரர் கோவிலில் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். காவேரி தனது சொந்த பாணியில் நிர்வாகத்தை வழிநடத்தினார். கவனம் செலுத்த வேண்டிய சட்ட வழக்குகளில் கவனம் செலுத்தி தனது பணிகளை சிறப்பாக செய்து வந்துள்ளார்.
இதனிடையே சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், கடந்த மாத இறுதியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை உயிரிழந்தார். இதனால் சக கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சோகம் அடைந்துள்ளனர்.