கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மீண்டும் கொரோனா! டெல்லி பயணம் ரத்து!

 
பொம்மை

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு மீண்டும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவரது டெல்லி பயணம் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தூள்ளார். சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பல்வேறு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

பொம்மை

குறிப்பாக மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன் . கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதனால் எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web