4 வயது சிறுவன் கடத்தல் !! ரூ1 கோடி கேட்டு கடத்திய மர்ம கும்பல்!!! பகீர் பிண்ணனி!!

 
தருண்


கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராப்பாளையம் அருகே உள்ள அக்கராயப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் லோகநாதன். என்ஜினீயரான இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு பவேஷ் (6), தருண் ஆதித்யா (4) என்ற 2 மகன்கள் உள்ளனர். 

தருண்
வெளிநாடு சென்றிருந்த லோகநாதன் கடந்த 7ம் தேதி சொந்த ஊர் திரும்பி இருக்கிறார். குடும்பத்தாருடன் மகிழ்ச்சியாக நாட்களை கழிக்க திட்டமிட்டிருந்த அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் குடும்பத்துடன் உறங்கிக் கொண்டிருந்த லோகநாதன் காலையில் கண்விழித்து பார்த்த போது அவரது 4 வயது மகன் தருண் ஆதித்யாவை காணாமல் பதறிப்போனார். கணவன், மனைவி இருவரும் தருண் ஆதித்யாவை அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கச்சிராப்பாளையம் போலீஸ் நிலையம் சென்ற சிறுவனின் பெற்றோர், தங்களது 4 வயது மகன் காணாமல் போனது குறித்து புகார் அளித்தனர். 

இதற்கிடையில் லோகநாதனின் மனைவி கவுரியின் செல்போனுக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு உங்கள் மகன் ஆதித்யாவை நாங்கள் கடத்தி வைத்து இருக்கிறோம். ரூ.1 கோடி கொடுத்தால்தான் உயிருடன் பார்க்க முடியும் என்று மிரட்டி இருக்கிறான். இது குறித்து உடனடியாக கச்சிராபாளையம் போலீஸ் அதிகாரிகளிடம் லோகநாதனும், கவுரியும் தெரியப்படுத்தினார்கள்.

உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் உத்தரவிவவ் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி தலைமையிலான 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. சிறுவனை தேடும் பணியில் மும்முரமாக இறங்கிய போலீசார் மர்ம அழைப்பு வந்த செல்போனை வைத்து தேடுதல் பணியை முடுக்கிவிட்டனர். பின்னர் நேற்று காலை மீண்டும் கவுரியிடம் போன் செய்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டி இருக்கிறான்.


செல்போன் டவர் சிக்னலை வைத்து கடத்தல் ஆசாமி, சின்னசேலம் அருகே பங்காரம் பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக குறிப்பிட்ட பகுதியில் போலீசார் நடத்திய சோதனை வேட்டையில் கடத்தல்காரர்கள் 2 பேரை அதிரடியாக கைது செய்தனர். 4 வயது சிறுவன் தருண் ஆதித்யாவையும் பத்திரமாக மீட்டனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

தருண்

போலீசார் நடத்திய விசாரணையில், கச்சிராப்பாளையம் ஊத்தோடை பகுதியைச் சேர்ந்த லட்சுமி மகன் சுந்தரசோழன் (45) மற்றும் அதேபகுதியை சேர்ந்த டேனியல் என்பவரின் மகன் ஈஸ்டர்ராஜ் (36) என்று தெரிய வந்தது. இதில் குற்றவாளி சுந்தரசோழன், லோகநாதனின் உறவினர் என்பதும் போலீசாருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேலும் இவர்களுக்கு உடந்தையாக ரகுபதி, அருள் ஆகியோர் செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. தலைமறைவாக உள்ள ரகுபதி, அருள் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


மீட்கப்பட்ட 4 வயது சிறுவன் ஆதித்யா, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். சிறுவன் கடத்தப்பட்ட சில மணி நேரத்திலேயே பாதுகாப்பாக மீட்கப்பட்டது குறித்து போலீசாருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகிறது. உறவுக்காரரே சிறுவனை கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web