வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே உஷார்!! மும்பையில் வீடு புகுந்து பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்!!

 
பாலியல் தொல்லை

மும்பையில் வீடு புகுந்து பெண்ணை    3 பேர் கொண்ட கும்பல்,  பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. முன்பை குர்லாவை சேர்ந்த 42 வயது பெண் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல்   பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

பின்னர் வெறி அடங்காத அந்த கொடூரர்கள் பெண்ணின் கைகள், மார்பு பகுதிகளில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். மேலும், சிகரெட்டை கொண்டு அந்த பெண்ணை சித்தரவதை செய்துள்ளனர்.  அதில்   ஒருவன் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து, நடந்ததை போலீசில் கூறினால், இந்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

பாலியல் பலாத்காரம்

இருப்பினும்  அந்தப் பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை அக்கம்பக்கத்தினரிடம் கூறினார். இதையடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பத்தால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இதுபோன்ற குற்றங்களை தடுக்க போலிசார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பெண்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

From around the web