4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு!

 
முதல்வர் ஸ்டாலின்

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி  வருகிற 28ம் தேதி நடைபெற உள்ள நிலையில் 4 மாவட்டங்களுக்கு தமிழக அரசு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகிற 28-ம் தேதி தொடங்கி முதல் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

அதன் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தன. அதற்கான நிதியையும் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

சென்னை செஸ்

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மொத்தம் 187 நாடுகளைச் சேர்ந்த 2,500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே அதற்கான முன்னேற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழா வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் வருகிற 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

செஸ் ஒலிம்பியாட்

இதற்கிடையில் கடந்த வாரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியையட்டி காண தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் சென்னை முதல் மாமல்லபுரம் வரை இலவச பேருந்துகளை இயக்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

From around the web