காதலுக்கு கண் இல்லை!! வேன் ஓட்டுனரை கரம் பிடித்த கல்லூரி மாணவி!! ​​​​​​​

 
வினோதினி, சூர்யா

காதலுக்கு கண் இல்லை, சாதி மதம் மொழி கிடையாது என்ற வசனங்களை நாம் கேட்டிருக்கிறோம். அப்படி ஒரு சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பிலாத்து பகுதியை சேர்ந்தவர் சூர்யா. வேன் ஓட்டுனர். தென்னம்பட்டியை சேர்ந்தவர் வினோதினி . இவர், திண்டுக்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

பள்ளி காதல்

இவர்கள் 2 பேரும் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.  இவர்களது காதல் விவகாரத்தை அறிந்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் வினோதினியை கண்டித்துள்ளனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில்  பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி  திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

காதல்… கல்யாணம்… தனிக்குடித்தனம்!! இளம்பெண்ணை ஏமாற்ற முயன்ற VAO!! தர்ணாவில் இறங்கிய காதலி!!

பின்னர் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய போது உடன்பாடு ஏற்படவில்லை.  மணமக்கள் இருவரும் மேஜர் என்பதால், அவர்கள் விருப்பப்படி வாழலாம் என்று கூறி போலீசார் திருமண ஜோடியை அனுப்பி வைத்தனர்.

 

From around the web