மாணவியை வீட்டிற்கு அழைத்த காம வெறிப்பிடித்த ஆசிரியர்!! அதிர்ச்சி ஆடியோ!!

 
குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் சதீஷ்

வேலியே பயிரை மேய்ந்த கதையை போல் ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டிய ஆசிரியரே ஒழுங்கீன செயலில் ஈடுப்பட்டு மாணவியை வீட்டிற்கு அழைத்த சம்பவம் நாகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   நாகப்பட்டினத்தை அடுத்த புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

நர்சிங் கல்லூரி

அக்கல்லூரியில் உடற்கூறியியல் ஆசிரியராக பணிபுரியும் நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த சதிஷ் என்பவர் மாணவிகளிடம் அடிக்கடி பாலியல் சில்மிஷத்தில் ஈடுபடுவார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில், அக்கல்லூரியில் பயிலும் நர்சிங் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் தனது காம இச்சைக்கு அடிபணியுமாறு பேசும் செல்போன் உரையாடல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  அதன்படி, ஆசிரியர் சதிஷ் மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு கண்டிக்க அழைப்பதும், அதற்கு அந்த மாணவி நான் கல்லூரிக்கு வருகிறேன் சார் என்று கூறுகிறார்,   அந்த ஆசிரியர் வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்துகிறார்.

நர்சிங் கல்லூரி   

ஒருகட்டத்தில் ஆசிரியரின் தொல்லையில் இருந்து நழுவுவதற்காக, தனக்கு மாதவிடாய் வலி இருப்பதாக சொல்லி அந்த மாணவி சமாளிக்கவே,   அந்த காமவெறி கொண்ட ஆசிரியர், பரவாயில்லை நான் பார்த்துக்கொள்கிறேன் வா என்று தனது வீட்டிற்கு அழைப்பது போன்ற பேச்சுக்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன், கல்லூரி மாணவிகளிடம் சமரசத்தில் ஈடுபடும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளது.   இந்த ஆடியோ வைரலாகிய நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கல்லூரியில் மாணவிகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  

From around the web