மதுரையில் தீயாய் பரவும் மெட்ராஸ் ஐ… மக்களே உஷார்…

 
மெட்ராஸ் ஐ

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தற்போது மெட்ராஸ் ஐ என்ற நோய் பரவி வருவதாகவும் இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.  இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் தினமும் 30 பேருக்கு மெட்ராஸ் ஐ பாதிப்பு ஏற்படுவதாக அரசு மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் ஐ

மதுரையில் இதுவரை 210 க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் மெட்ராஸ் ஐ குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தகுந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில நாட்களில் குணமாக்கி விடலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மெட்ராஸ் ஐ

மெட்ராஸ் ஐ பாதிப்புள்ளவர்கள் அடுத்தவர் கண்களை பார்த்தால் பரவும் என்பது முற்றிலும் தவறு என்றும் மதுரையில் மெட்ராஸ் ஐ பாதிப்பு பரவுவது குறித்தது மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அரசு மருத்துவமனை தெரிவித்துள்ளது.

From around the web