நாளை மகாகவி தினம் அனுசரிப்பு!! முதல்வர் அதிரடி அறிவிப்பு!!

 
பாரதியார்

1882-ம் ஆண்டு டிசம்பர் 11 அன்று எட்டயபுரத்தில் பிறந்த சுப்பிரமணியன், 7 வயதிலேயே கவிதை எழுதத் தொடங்கினார். 11 வயதில் எட்டயபுர சமஸ்தானத்தில் தன் புலமையை நிரூபித்த சுப்ரமணியனை, பாரதி என பட்டமளித்துப் பாராட்டினார் எட்டயபுர மன்னர்.

பாரதியார்

1904-ம் ஆண்டு சென்னைக்கு வந்த பாரதி, சுதேச மித்திரன், சக்ரவர்த்தினி பத்திரிகைகளில் பணியாற்றினார். விவேகானந்தரின் சிஷ்யையான நிவேதிதா தேவியை சந்தித்த பின்னர் பெண்ணுரிமை பற்றிய அவரது சிந்தனை மேலோங்க, பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என முழங்கினார்.1921-ம் ஆண்டு ஜூலை மாதம், பார்த்தசாரதி கோயில் யானையால் தாக்கப்பட்ட பாரதி உடல்நலம் குன்றினார். தனது 39 வயது வரை வாழ்ந்த பாரதி 1921 செப்டம்பர் 11 அன்று வரலாறாக மாறினார்.

மகாகவி பாரதியாரின் நினைவு நாளை முன்னிட்டு, ஆண்டுதோறும் செப்டம்பர் 11ம் தேதியன்று மகாகவி நாளாக கடைப்பிடிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். மேலும் அன்றைய தினத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதைப்போட்டி நடத்தி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ வழங்கப்படும். அப்படி ‘பாரதி இளங்கவிஞர் விருது’ பெறும் ஒரு மாணவருக்கும் மற்றும் ஒரு மாணவிக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இன்று பிறந்தநாள் காணும் பாரதியார் புகழை இளைய தலைமுறைக்கு எடுத்து சொல்வோம்!!

இந்நிலையில், மகாகவி பாரதியாரின் நினைவு நாளான நாளை செப்டம்பர் 11-ம் தேதி “மகாகவி நாள்” என கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நாளை காலை 9 மணிக்கு மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.எனவே சிறப்பு வாய்ந்த மகாகவி நாளான 11.09.2022 அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web