காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராகிறார் மல்லிகார்ஜூன கார்கே!

 
மல்லிகார்ஜுன

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு முன்னாள் பிரதமர் நேரு குடும்பத்தைச் சேர்ந்தவரல்லாதவர்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவராகி இருக்கிறார்கள். இவரை எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் படுதோல்வி அடைந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால், காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். இதைத் தொடர்ந்து, கட்சிக்கு முழுநேர தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 17-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் அந்தந்த மாநிலங்களின் காங்கிரஸ் தலைமை அலுவலகங்களில் காலை10 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 9,900 நிர்வாகிகள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 9,500 பேர் நேற்று முன்தினம் தங்கள் வாக்குகனை செலுத்தினார்கள். தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் வாக்களித்தனர். 95 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.பெண் எம்.பி.க்களுடன் சசிதரூர் செல்ஃபி: சர்ச்சையை கிளப்பிய வைரல் புகைப்படம்

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்காக நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது. இந்நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதிவான வாக்குகளில் 7,897 வாக்குகள் கார்கேவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 416 வாக்குகள் செல்லாதவை என தகவல் வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு, நேரு குடும்பத்தை அல்லாதவர் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ராகுல் காந்தி

முன்னதாக, தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக சசி தரூர் தரப்பு குற்றம்சாட்டியிருந்தது. உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் வருந்தத்தக்க நிகழ்வுகள் நடந்திருப்பதாகவும் எனவே அந்த மாநிலத்தில் உள்ள வாக்குகளை ரத்து செய்ய வேண்டும் என அவர்கள் குற்றம்சாட்டி இருந்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web