அசத்தல்!! தாகூர் சர்வதேச திரைப்பட விழா: 3 விருதுகளை தட்டி தூக்கிய ‘மாமனிதன்’
மாமனிதன் திரைப்படம் தொடர்ந்து விருதுகளை குவித்து வருவதற்கு ரசிகர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ திரைப்படம் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் நடிகர் விஜய் சேதுபதி, காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். இத்திரைப்படத்திற்கு முதன் முறையாக இசைஞானி இளையராஜா மற்றும் அவரது மகன் யுவன் ஷங்கர் ராஜா கூட்டணி அமைத்து இசையமைத்திருந்தனர். ஒய்.எஸ்.ஆர் நிறுவனம் மூலம் இப்படத்தை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த இணைப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது.
இந்நிலையில் திரையங்குகளில் வெளியான நாள் முதல், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதற்கு பல பேர் நல்ல ஆதரவை தெரிவித்தனர். நிலையில் இப்படம் டோக்கியோவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் சிறந்த ஆசிய திரைப்படம் எனும் கோல்டன் விருதினை பெற்று அந்த திரைப்படக் குழுவை மகிழ்சி கடலில் ஆழ்த்தியது.
தற்போது தாகூர் இன்டர்நேஷனல் பிலிம் பெஸ்டிவலில் மாமனிதன் திரைப்படம் திரையிடப்பட்டது. இதன் மூலம் மேலும் சிறந்த நடிகருக்கான விருதையும், சிறந்த சாதனை விருதையும், விமர்சகர்கள் தேர்வு விருதையும் சேர்த்து மொத்தம் 3 விருதுகளை மாமனிதன் திரைப்படம் குவித்துள்ளதாக இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து படக்குழுவினருக்கு, திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.