பல வருஷமா மன உளைச்சல்.. அழுதுருவேன்.. கண் கலங்கிய நடிகை ராஷ்மிகா!

 
ராஷ்மிகா

பாராட்டலைன்னாலும் பரவாயில்லை.. கிண்டல் பண்ணாமலாவது இருக்கலாம். எனக்கு பல வருஷங்களாகவே இந்த பிரச்சனை இருக்கு. இது பற்றி பேசினால், கண்டுக்காம விட்டுடுன்னு எல்லோரும் அட்வைஸ் பண்றாங்க. ஆனா, என்னால அப்படியெல்லாம் கடந்து போக முடியலை. ப்ளீஸ்.. விட்டுடுங்க.. என தன்னை ட்ரோல் செய்யும் ரசிகர்களிடம் கண்  கலங்கியபடியே வேண்டுகோள் வைத்து கேட்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

2016ல் கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த ‘கீதா கோவிந்தம்’ படத்தில் கதாநாயகியாக நடித்த ராஷ்மிகா தென்னிந்திய சினிமாவில் மிகுந்த பிரபலமடைந்தார்.

2021ல் கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷ்மிகா, அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘சீதாராமம்’ படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

தற்போது இந்தியில் அனிமல், மிஷின் மஞ்சு மற்றும் தெலுங்கில் புஷ்பா 2 ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தளபதி விஜய் உடன் இணைந்து வாரிசு படத்திலும் நடித்து வரும் நிலையில், அதன் முதல் பாடல் ரஞ்சிதமே சில தினங்கள் முன்பு வெளியானது. ரசிகர்கள் அந்த பாடலை கொண்டாடினாலும் ஒரு தரப்பினர் ட்ரோல் செய்து வருகிறார்கள்.

ராஷ்மிகா

பாடலை, அப்பட்டமான காப்பி என சொல்லி சிலர் ட்ரோல் செய்ய, அதில் ராஷ்மிகா கரகாட்டக்காரன் கோவை சரளா போல இருக்கிறார் என ட்விட்டரில் நடிகை ராஷ்மிகாவையும் ட்ரோல் செய்தனர்.

இந்நிலையில் தற்போது ராஷ்மிகா ட்ரோல்களுக்கு பதிலடி கொடுத்து ஒரு நீண்ட போஸ்ட் போட்டிருக்கிறார். அதில் அவர், “கடந்த சில தினங்களாக, மாதங்களாக.. ஏன் வருடங்களாக கூட எனக்கு ஒரு விஷயம் பிரச்சனையாக இருந்து வருகிறது. நான் பல வருடங்களுக்கு முன்பே இதை பற்றி பேசி இருக்க வேண்டும்.

நான் நடிக்க தொடங்கியதில் இருந்தே ட்ரோல்களை சந்தித்து வருகிறேன். என்னை எல்லோருக்கும் பிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை. அதற்காக உன்னைப் பிடிக்கவில்லை எனக் கூறி நெகட்டிவிட்டியை உமிழாதீர்கள். நான் உங்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று தான் கடினமாக உழைத்து வருகிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி.

ராஷ்மிகா

நான் சொல்லாத விஷயங்களை கூட வைத்து என்னை ட்ரோல் செய்து அசிங்கப்படுத்துவதை பார்த்து எனக்கு heart breaking ஆக இருக்கிறது. இதை எல்லாம் ignore செய்ய சொல்லி பலரும் எனக்கு அட்வைஸ் சொல்கிறார்கள், ஆனால் இது எல்லை மீறி போகிறது. ட்ரோல்கள் பற்றி பேசுவதால் நான் யாரையும் ஜெயிக்க விரும்பவில்லை. “Be kind everyone. We’re all trying to do our best” என பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

From around the web