நேற்று கல்யாணம்!! இன்று ரத்து செய்து மணமகனை தூக்கியெறிந்த மணப்பெண்!! பகீர் பிண்ணனி!!

 
5வது திருமணம்

 

திருப்பூர் பி.என்.ரோடு பூலுவப்பட்டி தெருவில் வசித்து வரும் இளைஞருக்கும், 25 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. மணமக்ன பனியன் நிறுவனத்தில் ஊழியராக இருந்து வருகிறார். நிச்சயத்தை அடுத்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதன்படி பெரியோர்கள் முன்னிலையில் அங்குள்ள ஒரு கோவிலில் நேற்று இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம்

அதன் பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் தடபுடலாக நடைபெற்றது. திருமண சடங்குகள் அனைத்தும் உறவினர்கள் மத்தியில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. அப்போது மணமகனின் காலை பார்த்த மணமகள் அதிர்ச்சியடைந்தார். இளைஞரின் 2 கால்களில் ஒரு கால் மட்டும் வித்தியாசமாக இருப்பதால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இது குறித்து மணமகள், மணமகனிடம் கேட்டார், அதற்கு ஒரு விபத்தில் அடிபட்டுவிட்டதால் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக பதில அளித்தார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண்  அதை ஏன் திருமணத்திற்கு முன்பாக தன்னிடம் கூறவில்லை என்று ஆத்திரப்பட்டு கூச்சலிடத் தொடங்கினார். இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று மேடையை விட்டு மணப்பெண் இறங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் இரு வீட்டாரும் இந்த பிரச்சினையை போலீஸ் நிலையம் வரை கொண்டு சென்றனர். அங்கு போலீசார் பேசிப்பார்த்தும் மணப்பெண் சமாதானம் அடையாமல் என்னிடம் உண்மையை மறைத்ததால் இந்த திருமணத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்று தொடர்ந்து கூறி வந்தார்.

போலீஸ்

ஒரு கட்டத்தில் தம்பதி இருவரும் பிரிந்து செல்ல முடிவெடுத்ததால், போலீஸ் நிலையத்தைவிட்டு வெவ்வேறு பாதையில் குடும்பத்தாருடன் சென்றனர். திருமணமான சில நிமிடங்களிலேயே மணமகனை வேண்டாம் என்று மணமகள் உதறிச் சென்ற சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நம்பிக்கை அடிப்படையிலான திருமண பந்தம் ஒரு கட்டத்தில் உடைந்துவிடும்போது உறவுகள் முறிவது இயல்புதான் என்று உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

வங்கிக்குள் திடீரென நுழைந்த காளை!! தெறித்து ஓடிய பொதுமக்கள்!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

இனி சாவியைத் தேட தேவையில்ல!! கையிலே பொருத்திக் கொள்ளலாம்!!

From around the web