மருது சகோதரர்களின் நினைவு தினம்! விருதுநகரில் நாளை மாலை வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் இயங்காது!

 
மருது சகோதரர்கள்

இன்று மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து  டாஸ்மாக் கடைகளும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் இன்று  மருதுபாண்டியர் சகோதரர்கள் நினைவு தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக நேற்று ஏற்கனவே இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுவிட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

டாஸ்மாக் விடுமுறை

இதைத்தொடர்ந்து மருதுபாண்டியர் சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக்கடைகளும், தனியார் மதுபான விற்பனையகங்களும் மூடப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் மதுப்பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்னர்.

மருது சகோதரர்கள்

அதே போல பசும்பொன் தேவர் குருபூஜையையட்டி வருகிற 29ம் தேதி மாலை 6 மணி முதல் அதற்கடுத்த நாளான 30ம் தேதி வரை அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் தனியார் மதுபான விற்பனையகங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி யாரேனும் மதுபான விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது பதுக்கி விற்பனை செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

செல்வம் செழிக்க ஐப்பசியில் இந்த பிரார்த்தனையை மிஸ் பண்ணாதீங்க!

From around the web